The Intellectual Rule Book |
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கேள்விகளை உங்கள் ஆசிரியர்களிடம் கேட்டுவிடாதீர்கள்! ஆசிரியர்கள் ஓட்டம் பிடித்து விடுவார்கள்! Download |
தாம்பரம் பற்றி உன் அறிவை வளர்த்துக்கொள்ள அறியப்பட வேண்டியவைகள்:
1. அதன் பாகங்கள் எவை?
2. அதிலிருப்பது, மற்ற எதிலிருக்கிறது?
3. அதனோடு இணைந்திருப்பவைகள் எவை?
4. அதைப் பாதிப்பவைகள் எவை?
5. அதன் உருக்கள் எவை?
6. அதற்குப் பதிலாக இருக்கும் மாற்றுகள் எவை?
7. அதனால் ஏற்படும் பயன்கள் எவை?
இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் தாம்பரம் பற்றி அறிவேதுமில்லாதவன்.
[The Expected Knowledge ஞானசூத்திரம்]
தாம்பரம் பற்றி ஒருவன் கூறவிருப்பவை: |
•அது பாகம் பாகமாகப் பகுபடக்கூடிய ஒன்றாகும். •அதிலிருப்பது ஏனையவைகளிலும் இருக்கிறது. •அது ஏனையவைகளோடு இணைந்து தொடர்பில் இருக்கிறது. •அது ஏனையவைகளால் பாதிப்படைகிறது. அதுவும் ஏனையவைகளைப் பாதிக்கிறது. •அது ஒரே உருவில் நிலையாக நில்லாமல் அதன் பிற உருக்களுக்குத் தொடரக்கூடியது. •அதற்குப் பதிலாக மாற்றுகள் இருக்கின்றன. •அது பயனற்ற ஒன்றல்ல, தேவையான ஒன்றாகும். |
தாம்பரம் பற்றி பள்ளி கல்லூரிகளில் பயின்றவன் கூறவிருப்பவைகளில் எவை பள்ளி கல்லூரிகளில் பயிலாதவனால் கூறமுடியாதவைகள்?
Downloads: |
எப்பொருளையும் பற்றிய உன் அறிவு எதிர்பாராததல்ல! The Expected Knowledge The Knowledge Expansion Manual |
தாம்பரம் (ஆங்கிலம்:Tambaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
இவ்வூரின் அமைவிடம் 12.93° N 80.11° E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 32 மீட்டர் (104 அடி) உயரத்தில் இருக்கின்றது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 137,609 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். தாம்பரம் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தாம்பரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்களால் 10க்கும் மேற்ப்பட்ட மிக அழகிய தாமரைக்குளங்களால் நிர்மாணிக்கப்பட்ட பழமையயான ஊர் தாம்பரம் ஆகும். இப்பொழுதுள்ள தாம்பரம் பல வளர்ச்சிகளை கண்டு மாறுபட்டிருந்தாலும், பூர்விகமான பழைய தாம்பரம் இன்னும் தனது பாரம்பரிய கலாசாரத்துடன் விளங்கிக்கொண்டுவருகிறது, மேலும் இங்குள்ள மக்கள் தங்களின் பழைய மரபுகளையும் கட்டிகாத்து வருகிறார்கள்.
1990 வரை பயிர் இட்டு வளர்ச்சிகண்ட கிராமம். சென்னை நகரின் விரிவு – நகரமயமாக்கலால் ஆகியவைகளால் பயிர்தொழில் நின்றுவிட்டது. அன்மையில் பழையதாம்பரத்தின் குளம் பலநல்ல உள்ளங்களின் முயற்ச்சியினால் தூய்மை படுத்தப்பட்டு தற்பொழுது இம்மக்களின் நீர் ஆதாரமாகவும், நடைபயற்சி பகுதியாகவும் உள்ளது
குளத்தின் மேற்கு கரையில் பலநூற்றண்டுகள் பழமையான சிவன்கோவில் புதுப்பிக்கப்பட்டு சிவன் -விஷ்ணு கோவிலாக விளங்குகிறது
தாம்பரம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 31. இது திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. மைலாப்பூர், சைதாப்பேட்டை, திருப்போரூர், சிறீபெரும்புதூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
தொகுதியில் அடங்கிய பகுதிகள்
தாம்பரம் வட்டம்
கடப்பேரி, திருவஞ்சேரி, முடிச்சூர், கஸ்பாபுரம், வெங்கம்பாக்கம், அகரம்தென், கோவிலாஞ்சேரி, மதுரப்பாக்கம் மற்றும் மூலச்சேரி கிராமங்கள்.
தாம்பரம் (நகராட்சி), சிட்லப்பாக்கம் (பேரூராட்சி), செம்பாக்கம் (பேரூராட்சி), மாடம்பாக்கம் (பேரூராட்சி), பெருங்களத்தூர் (பேரூராட்சி) மற்றும் பீர்க்கன்கரணை (பேரூராட்சி)