The Intellectual Rule Book |
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கேள்விகளை உங்கள் ஆசிரியர்களிடம் கேட்டுவிடாதீர்கள்! ஆசிரியர்கள் ஓட்டம் பிடித்து விடுவார்கள்! Download |
கத்தரிக்காய் பற்றி உன் அறிவை வளர்த்துக்கொள்ள அறியப்பட வேண்டியவைகள்:
1. அதன் பாகங்கள் எவை?
2. அதிலிருப்பது, மற்ற எதிலிருக்கிறது?
3. அதனோடு இணைந்திருப்பவைகள் எவை?
4. அதைப் பாதிப்பவைகள் எவை?
5. அதன் உருக்கள் எவை?
6. அதற்குப் பதிலாக இருக்கும் மாற்றுகள் எவை?
7. அதனால் ஏற்படும் பயன்கள் எவை?
இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் கத்தரிக்காய் பற்றி அறிவேதுமில்லாதவன்.
[எப்பொருளையும் பற்றி நீ அறியக்கூடியதெவை? Download For Offline Use]
கத்தரிக்காய் பற்றி ஒருவன் கூறவிருப்பவை: |
•அது பாகம் பாகமாகப் பகுபடக்கூடிய ஒன்றாகும். •அதிலிருப்பது ஏனையவைகளிலும் இருக்கிறது. •அது ஏனையவைகளோடு இணைந்து தொடர்பில் இருக்கிறது. •அது ஏனையவைகளால் பாதிப்படைகிறது. அதுவும் ஏனையவைகளைப் பாதிக்கிறது. •அது ஒரே உருவில் நிலையாக நில்லாமல் அதன் பிற உருக்களுக்குத் தொடரக்கூடியது. •அதற்குப் பதிலாக மாற்றுகள் இருக்கின்றன. •அது பயனற்ற ஒன்றல்ல, தேவையான ஒன்றாகும். |
கத்தரிக்காய் பற்றி பள்ளி கல்லூரிகளில் பயின்றவன் கூறவிருப்பவைகளில் எவை பள்ளி கல்லூரிகளில் பயிலாதவனால் கூறமுடியாதவைகள்?
Downloads: |
எப்பொருளையும் பற்றிய உன் அறிவு எதிர்பாராததல்ல! The Expected Knowledge The Knowledge Expansion Manual |
திருச்சி, இந்தியா: தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் நேரு, சிறை செல்வதைத் தவிர்க்க புதிய உத்தி ஒன்றை கையாண்டுள்ளார். பல குற்றச்சாட்டுகளில் எந்த நிமிடத்திலும் கைதாகலாம் என்ற நிலையில், அவரது இந்த உத்தி பலனளிக்குமா என்பதைக் காண தி.மு.க.வினர் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
புதிய உத்தி என்ன? திருச்சி மாவட்ட தி.மு.க. அலுவலகத்தின் முன் சுவரை இடித்துள்ளார்.
இப்போது உங்களுக்கு குழப்பம் வந்திருக்கணுமே. ஆக்கிரமிப்பு செய்த நிலங்களின் பத்திரங்களை, இந்த முன் சுவருக்குள் பதுக்கி வைத்திருந்தாரா? அல்லது, சுவரை இடித்துவிட்டால் இவரைக் கைது செய்ய போலீஸால் உள்ளே வர முடியாதா? இப்படி பல கேள்விகள் வரணுமே.
அதல்ல விஷயம். முன்னாள் அமைச்சரின் சுவர் இடிப்புக்கு காரணம், வாஸ்து!
நேரு தற்போது வசிக்கும் இல்லத்திலிருந்து நான்கு தெருக்கள் தள்ளி, தில்லை நகர் ஐந்தாவது கிராசில் அமைந்துள்ளது திருச்சி மாவட்ட தி.மு.க., அலுவலகம். இந்த அலுவலகத்துக்கு முன்பக்க வாயில் இதுவரை காலமும் இடதுபுறம் இருந்து வந்தது. நேரு தனது வீட்டிலிருலுந்து கட்சி ஆபீஸ் வரும்போது, அவரது கார் இடதுபுற வாயில் ஊடாக நேரே காம்பவுண்டுக்குள் செல்லக்கூடியதாக இருந்தது.
இந்த இடதுக்க வாயிலை மூடிவிட்டு, வலது பக்கத்திலுள்ள சுவரை இடித்து புதிதாக வாயில் ஒன்றை நேருவின் உத்தரவுக்கமைய அமைத்துள்ளார்கள். இப்போது நேருவின் கார், நேரடியாக காம்பவுண்டுக்குள் செல்ல முடியாது.
முன்பைவிட வசதிக் குறைவாக அல்லவா இருக்கிறது இது? ஆனால், முன்னாள் அமைச்சரின் வாஸ்து சாஸ்திர ஆலோசகர் அப்படிக் கருதவில்லை.
வாஸ்து சாஸ்திர ஆலோசகரின் கருத்து என்னவென்றால், அமைச்சரின் கார் நேரடியாக அலுவலகத்துக்கு உள்ளே செல்லும் வகையில் இருந்தால், அமைச்சரை அது நேரடியாக சிறைக்கு உள்ளே கொண்டுபோய் சோத்துவிடும் என்பதுதான்!
அமைச்சர் சிறைக்குச் செல்வதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால், இடப்புற வாயிலை இடித்துவிட்டு, வலப்புறத்தில் புதிய வாயிலை அமைக்குமாறு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சிறைக்குச் செல்வதிலிருந்து தப்பிக்க வீரபாண்டியார், தலைமறைவாகித் திரிந்து கொண்டிருந்தார். நம்ம நேரு ஒரு சுவத்தை இடிக்க மாட்டாரா? இடிச்சே விட்டாருங்க!
இந்த முன்னாள் அமைச்சருக்கு வாஸ்து வேலை செய்யுமா? பதிலை மிக்க ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவருடைய மற்றைய மாஜி அமைச்சரவை சகாக்கள், கைகளில் கடப்பாறை சகிதம்!