ஜோதிடம் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

The Intellectual Rule Book
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கேள்விகளை உங்கள் ஆசிரியர்களிடம் கேட்டுவிடாதீர்கள்! ஆசிரியர்கள் ஓட்டம் பிடித்து விடுவார்கள்! Download

20080818jackfruit

ஜோதிடம்  ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. அத‌ன் உருக்க‌ள் எவை?
6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் ஜோதிடம் பற்றி அறிவேதுமில்லாதவன்.

[The Expected Knowledge    ஞானசூத்திரம்]

ஜோதிடம் ப‌ற்றி ஒருவ‌ன் கூற‌விருப்ப‌வை:
அது பாக‌ம் பாக‌மாக‌ப் ப‌குப‌ட‌க்கூடிய‌ ஒன்றாகும்.
அதிலிருப்ப‌து ஏனைய‌வைக‌ளிலும் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளோடு இணைந்து தொட‌ர்பில் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளால் பாதி‌ப்ப‌டைகிற‌து. அதுவும் ஏனைய‌வைகளைப் பாதிக்கிற‌து.
அது ஒரே உருவில் நிலையாக‌ நில்லாமல் அத‌ன் பிற‌ உருக்க‌ளுக்குத் தொட‌ர‌க்கூடிய‌து.
அத‌ற்குப் ப‌திலாக‌ மாற்றுகள் இருக்கின்ற‌ன‌.
அது ப‌ய‌ன‌ற்ற‌ ஒன்ற‌ல்ல‌, தேவையான‌ ஒன்றாகும்.

ஜோதிடம் பற்றி பள்ளி கல்லூரிகளில் பயின்றவன் கூறவிருப்பவைகளில் எவை பள்ளி கல்லூரிகளில் பயிலாதவனால் கூறமுடியாதவைகள்?

idli

2832408373_da6de471ae

Downloads:
எப்பொருளையும் பற்றிய‌ உன் அறிவு எதிர்பாராத‌த‌ல்ல‌!
The Expected Knowledge
The Knowledge Expansion Manual

About Sivashanmugam Palaniappan

ஒன்றுமில்லாமல் ஒன்றுமிருக்காது! ஒன்றை முழுமையாக அறிந்துகொள்ள அதன் பாகங்களை மட்டும் அறிந்தால் போதாது; அதன் தனித்தன்மைகளையும், தொடர்புகளையும், தாக்கங்களையும், திரிவுகளையும், பயன்களையும், மாற்றுக்களையும் அறியவேண்டும். ~ சிவஷண்முகம்
This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

14 Responses to ஜோதிடம் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  1. ஷீலூ says:

    _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

    மாங்கொட்டை பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    மாங்கொட்டை ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

    _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

    புளியங்கொட்டை ப‌ற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    புளியங்கொட்டை ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

    _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

    வேப்பங்கொட்டை பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    வேப்பங்கொட்டை ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

    _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

    நவப்பழக்கொட்டை பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    நவப்பழக்கொட்டை ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

    _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

    பனங்கொட்டை பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    பனங்கொட்டை ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

    _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

    முந்திரிக்கொட்டை பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    முந்திரிக்கொட்டை ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

    _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

    பாதாம் கொட்டை பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    பாதாம் கொட்டை ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

    _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

    காப்பிக் கொட்டை பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    காப்பிக் கொட்டை ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

    _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

    மொச்சைக் கொட்டை பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    மொச்சைக் கொட்டை ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

    _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

    பருத்தி கொட்டை பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    பருத்தி கொட்டை ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

    _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

    உத்ராட்சக் கொட்டை பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    உத்ராட்சக் கொட்டை ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?

    _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

    வாதாங்கொட்டை பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    வாதாங்கொட்டை ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

    _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

    எட்டிக் கொட்டை பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    எட்டிக் கொட்டை ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

  2. தேவகி says:

    ருத்ராக்ஷத்தின் சிறப்புகளும் பலன்களும்
    சகலவேத ஆகமங்களிலும், ஆன்மீக நூல்களிலும் இறைவனாருக்கு உகந்த பொருட்களில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டது ருத்ராக்ஷமணிகள் ஆகும்.

    ருத்ராக்ஷ மணிகளை சாதாரண பொருளாகக் கருதுவது மிகவும் தவறு. அதில் மறைந்துள்ள உண்மைகளும் தெய்வீக சக்திகளையும் இன்றைய அறிவியல் உலகமே கண்டு வியக்கிறது. வெளிநாட்டினரும் விரும்பி அணியக் கூடியது. பெண்களுக்குத் திருமாங்கல்யம் எவ்வளவு முக்கியமானதோ சிவனடியார்களுக்கு ருத்ராக்ஷம்.

    ருத்ரம் என்ற புனிதப்பெயரிலிருந்து தோன்றியதாகக் கூட நாம் எடுத்துக் கொள்ளலாம்.திருமாங்கல்யம் உடைய பெண் எப்படி சுப காரியங்களுக்குத் தகுதியுடையவளோ அதேபோல ருத்ராக்ஷத்தை அணிந்தவன் சகல நல்ல காரியங்களுக்கும் தகுதியுடையவனாக ஆவான். சகலவேத ஆகமங்களிலும் சொல்லியபடி முக்தியை விரும்புபவர்களும் மற்றவர்களும் விபூதியைப் போலவே ருத்ராக்ஷத்தை அணிய வேண்டும். ருத்ராக்ஷத்தை அணிந்து கொண்டிருப்பவர்களைக் கண்டாலே சகலவித பாவங்களும் துன்பமும் அதி விரைவில் நீங்கும்.

    திருமாங்கல்யத்தைப் பார்த்ததும் எப்படி ஒரு பெண்ணை சுமங்கலியாக நினைங்கிறோமோ அதைப்போன்று ருத்ராக்ஷத்தை அணிந்தவர்களைக் கண்டால் சிவனடியார் என்றே நினைக்க வேண்டும்.

    சாபால உபநிடதமும் அட்சாமாலிகா உபநிடதமும் முழுக்க முழுக்க ருத்ராக்ஷத்தின் மகிமைகளையும் பெருமைகளையும் மட்டுமே கூறுகின்றன. அதனால் தான் வள்ளளாரும் “அக்கமா அணியும் உண்டாம்” என ருத்ராக்ஷத்தை சிறப்பித்துக் கூறுகிறார்.

    ருத்ரரின் கண்ணிலிருந்து தோன்றிய ருத்ராக்ஷத்துக்கு சம்சார துக்கத்தை நீக்கும்படியான அருள்பார்வை என்பதற்குச் சிவ பெருமானைப் போலவே ருத்ராக்ஷமும் நம்மிடம் உள்ள தீமைகளை நீக்கி நமக்கு அருள்புரியும் என்பதும் விளங்கும் ருத்ராக்ஷம் துறவிகளுகக்கு மட்டுமின்றி இல்லறத்தாருக்கும் ஏற்புடையதே திருநீறை அணிவதுபோல ருத்ராக்ஷமும் அணியலாம்.

    ருத்ராக்ஷ முகங்களைக் கணக் கெடுக்க, ஆரஞ்சு பழத்தை தோலுரித் துப்பார்த்தும் அதன் சுனைகள் எப்படி ஒன்றுடன் ஒன்று சேர்ந்து திருப்பது போல் ருத்ராக்ஷ முகங்களும் ஒன்றை யொன்று அடுத்தடுத்து சேர்ந்திருக்கும்.

    ஒருமுகம் உள்ள ருத்ராக்ஷம் சாட்சாத் சிவ சொரூபமாகும்.

    இதனை அணிவதால் ப்ரும்மஹத்தி தோஷம் நிவர்த்தி ஆகிறது.

    இரண்டு முக ருத்ராக்ஷம் தேவதேவி வடிவம் பலவிதமான பாவங்களைப் போக்க வல்லது. பசுவை வதம் செய்த பாவம் நீங்கும். தேவ தேவனாகிய சிவசக்தி வடிவான ஸ்ரீ அர்த்த நாரீஸ்வர சொரூபமாகும். இதனை அணிவதால் புத்தி பூர்வம், அபுத்தி பூர்வம் என்னும் இரண்டு வகையான பாப வினைகள் நீங்குகிறது.

    முன்று முகமுள்ள ருத்ராக்ஷம் அக்னிவடிவம் கொண்டது இது பெண்ணைக் கொலை செய்த பாவத்தை ஒரு கணத்தில் எரிக்கும்.

    நான்கு முகம் உள்ள ருத்ராட்சம் பிரம்ம தேவனின் வடிவம். அது மனிதவதை புரிந்த பாவத்தை நீக்கும்.

    ஐந்து முகம் ருத்ராட்சம் ருத்ரனே ஆகும் காலாக்னி என்ற அதன் பெயரே சிறப்பாகும்.இதனை அணிபவருக்கு சிவ அனுக்ரகம் கிட்டும்

    ஆறு முகம் ருத்ராட்சம் கார்த்திகேய வடிவம் அதை வலது கையில் அணிந்து கொள்ள வேண்டும் பிரம்மஹத்தியின் நிழல்கூட அண்டாது காக்கும்.இதனை வலது காதில் குண்டலமாகவோ அல்லது வலது புஜத்தில் அணிவது விசேஷ பலன்களைக் கொடுக்கும்.

    ஏழு முகமுள்ள ருத்ராட்சம் மன்மத வடிவம் பொன் முதலியவைகளைத் திருடிய பாவத்தைப் போக்கும் இது ஆதிசேடன் வடிவம் எனப்படும்.பெரும் சம்பத்து, ஆரோக்கியம், ஐசுவரியம், ஞானம், வாக்குத் தூய்மை போன்ற நல்ல சுகபோகங்கள் வாய்க்கும்.

    எட்டாவது முக ருத்ராட்சம் விநாயக வடிவம் தானத்தை திருடிய பாவம். தீய வெண்ணை அடைந்தபாவம் அடுத்தவர் உணவை உண்டதும், நீங்கும். இது ஸ்ரீ மஹாகணபதி ஸ்வரூபம். அஷ்ட வசுக்களை தெய்வமாகக் கொண்ட எட்டுமுக ருத்ராக்ஷத்தை தரிப்பவர்களுக்கு பலவகையான தோஷங்கள் நீங்குகின்றன.

    ஒன்பது முகம் கொன்ட ருத்ராட்சம் பைரவ வடிவம். அதை இடது கையில் அணிய வேண்டும். அது புத்தி, முக்தி முதலியவைகளைத் தரும். பரமேஸ்வரனுக்கு சமமான குணத்தையும் கொடுக்கும். முடிவில் சிவனிடமே சேர்க்க வல்லது. இது சிகப்பு நிறமுடையதாக இருக்கும். இதன் அதிர்ஷ்ட தேவதை அம்பிகை. இதனை இடது கையில் தரிப்பவர்கள் சிவ ரூபமாகவே கருதப்படுகிறார்கள். புத்தி முத்திகளை கொடுக்க வல்லது.

    பத்துமுக ருத்ராக்ஷம்: “பத்து முகம் புவியுண்டவனிர் உருவம் மருவு நாளொரு கோள் பல, மண்ணைப் பூதங்கள் பிரம்மராக்கத பேதுறுப்புரியும் விரவு தீங்கெலாபம் வெயில் படுபனியென விளக்கும்.”இது விஷ்ணு ச்வரூபமாகும். தச திக்குகளுக்கு தேவதைகளின் சொரூபமாக விளங்கும் இந்த ருத்ராக்ஷத்தை தரிப்பவர்களுக்கு அந்தந்த தேவதைகளின் ப்ரீதி கிட்டும். கிரஹதோஷங்களையும், பூத பேய் பிசாசுகளை விரட்டும். சர்ப்ப விஷங்களையும் போக்கும்.

    பதினொரு முகமுள்ள ருத்ராட்சம் – இது ஸ்ரீ ஏகாதச ருத்ரரின் ச்வரூபமாகும். இந்த ருத்ராக்ஷத்தின் பதினொரு முகங்களும் பதினொரு ருத்ர ஸ்வரூபங்களைக் குறிக்கும். அவை: போலி – பிங்கள – பீம – விரூபாக்ஷ – வியோகித – சாஸ்தா – அஜபாத – அஹிர்புத்தீய – சம்பு – சண்ட – பவ. இதனை சிரசில் தரிப்பதால் ஆயிரம் அஸ்வமேத யாகங்களை நடத்திய பலனும், கோடி கோதானம் செய்த பலனும் உண்டாகும்.

    பன்னிரண்டு முகமுள்ள ருத்ராட்சம் : 12 சூரியர்களின் வடிவம் கோமேத, அசுவமேத யாகங்கள் செய்த பலன்களைத் தரும். கொம்புள்ள மிருகங்கள் ஆயுதம் தாங்கியவர்கள் பலி முதலியன கொடூர மிருகங்கள் முதலியவற்றால் வரும் பயம், தடுத்தும் எல்லாவற்றையும் தீர்க்கும் உடல் வியாதிகளால் வரும் துன்பங்கள் நீங்கும்.துஷ்ட மிருகங்களால் துன்பம் ஏற்படாது. இதனைக் காதுகளில் அணிவது விஷேஷ பலனைத் தரும்.

    பதின்மூன்று முகமுள்ள ருத்ராட்சம் கார்த்தி கேய வடிவம். அது எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்யும். தாய், தந்தை, சகோதரன் முதலியனவர்களைக் கொன்ற பாவத்தை நீக்கும். இந்திர ஸ்வரூபம். இந்த ருத்ராக்ஷத்தை ஸ்ரீசதாஷிவ ஸ்வரூபம் என்றும் என்றும் கூறுவர். இந்த ருத்ராக்ஷ மாலையை அணிவதால் சர்வ கார்ய சித்தி உண்டாகும்

    பதினான்கு முகமுள்ள ருத்ராட்சம் அணிந்து கொள்பவன் சிவபெருமானுக்கு இணையானவனாகி தேவர்களாலும் போற்றி வணங்கப்பட்டு மோட்சத்தை அடைகிறான் அதன் மகிமை சொல்லில் அடங்காது. “சக்தி! நீயும் நானும் சேர்ந்த வடிவம் இது” என் பரமேஸ்வரனே தேவியிடம் கூறி இருக்கிறார். வசிய சக்தியைத் தரும். சிவ உலகிலேயே இருக்க வைக்கும். அதைக் கழுத்தில் அணிந்தால் உச்சரிக்கும் மந்திரங்கள் பலிக்கும் வெற்றி உண்டாக்கும்.இந்த ருத்ராக்ஷத்தை ஸ்ரீ ருத்ரமூர்த்தி சொரூபம் எனவும், ஸ்ரீஹனுமான் சொரூபம் எனவும் கூறுவர். இது கிடைப்பது மிகவும் அரிது.

  3. Kokilavani says:

    கற்பை இழக்கும் பெண்கள் ஜாதகம் ;பொருத்தம்
    ஜோதிடம் பார்க்க வருபவர்கள் திருமண பொருத்தம் பார்ப்பதாக இருந்தால்,பொருத்தம் பார்த்துவிட்டு கேட்கும் கேள்வி;பொண்ணுக்கு மாங்கல்யம் பலம் இருக்கா..?பொண்ணு ஒழுக்கம் எப்படி..? என்றுதான் கேட்கிறார்கள்.

    முக்கிய அறிவிப்பு;சில கழிசடைகள் இந்த பதிவை படித்துவிட்டு,பெண் கற்பு பத்தி ஆராய்ச்சியா..ஜோசியம் இதுல எங்க வருது?கற்புன்னு ஒண்ணு இருக்கான்னு எல்லாம் கூகிள் பஷ்ஷில் கழிந்து கொண்டிருக்கிறார்கள்.கற்பு என்பது என்னன்னு தெரியாதா?ராமாயணம்,மகாபாரதம்,இந்து மத சாஸ்திரம் எல்லாம் தெளிவா சொல்லியிருக்கே?கண்ணகி பத்தி கூட தெரியாதா?இவனுக எல்லாம் ஆணாதிக்கவாதிகளை வேரறுப்பவர்களாம்.இப்படி சொல்லி பெண்கள் மனதை கவர முயற்சிக்கும் கயவர்கள்.தினசரி செய்திதாளில் கற்பிழந்தாள்,கற்பழித்தான் என செய்தி போடுறானே அவனை போய் கேட்கலாமே..கற்புன்னா என்னனு..அரை வேக்காடுகளே..?

    ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பு என்பது ஒழுக்கம் தான்.கற்பில்லாத ஒழுக்கமில்லாத பெண்ணை எவனும் எந்த பெண்ணும் விரும்புவதில்லை.அதனால் கற்பு என்னும் ஒழுக்கம் ஜோதிடத்தில் மிக முக்கிய இடம் பெற்று இருக்கிறது.இப்படி கற்பு பத்தி எப்படி எழுதலாம்னு குதிப்பவர்கள்…கற்பு என்பதே யாருக்கும் இருக்க கூடாது என வாதாடுகிறார்களா?என்பது புரியவில்லை.ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் இந்திய கலாச்சாரத்தை மேலை நாடுகளும் இப்போது பின்பற்ற தொடங்கி உள்ளன..ஆனால் சில கழிசடைகள் சுதந்திரம் என்ற பெயரில் இந்த கட்டுபாட்டை உடைக்கவே விரும்புகின்றன..காரணம் தனித்து பணம் சம்பாதிப்பது.பகுத்தறிவு என்ற பெயரில் என் இஷ்டப்படி நடப்பேன்.அதை கேட்க நீ யார்..?என்கிறார்கள்.கற்பு பத்தி உன் உறவினரிடம் ஆராய்ச்சி செய் என்கிறான் ஒருவன்.உன் உறவினர் என் உறவினர் எல்லோருக்கும் கற்பு ,ஒழுக்கம் உள்ளது.

    பெண்ணின் ஜாதகம் பார்த்ததும்,அதன் ஒழுக்கம்,கற்பு எல்லாம் பட்டவர்த்தனமாய் தெரிந்துவிடும்.அவள் ஆசை எப்படி?கணவனுக்கு சுகம் உண்டா?அல்லது கணவனை தொந்தரவு செய்து போதாமல் அடுத்த ஆண்களையும் கவர் செய்யக்கூடிய பெண்ணா என்பது சில கிரக அமைப்புகளை பார்த்ததும் தெரிந்து கொள்ளலாம்.

    ஆனால் இதை இடம் பொருள் தெரியாமல் மாப்பிள்ளை வீட்டாரிடம் உளரக்கூடாது.அப்படி உண்மைகளை சொல்ல ஆரம்பித்தால் பெரும்பாலான கல்யாணம் நடக்காது.அவரவர் விதிப்படிதான் மனைவி அமையும்.ஒழுக்கமான மனைவி அமையும் யோகம் இருந்தால் அவனுக்கு சீதை போல மனைவி அமைவாள். அலட்சியமாக ஜாதக பொருத்தம் பார்க்காமல் வேலை,பணம்,வசதி பார்த்து திருமணம் செய்தால்,காம உணர்வு அதிகம் உள்ள பெண்ணை திருமணம் செய்தோ அல்லது குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்படுத்தும் பெண்ணாகவோ ,கணவ்னை எடுத்தெறிந்து பேசும் பெண்ணோ மனைவியாக அமைய வாய்ப்புண்டு.

    நட்சத்திர பொருத்தம் பார்த்தேன் .9 பொருத்தம் இருக்கு.சூப்பர் என புக்கை படிச்சு திருமணம் உறுதி செய்பவர்களுக்கும்.,மாசம் பொன்ணு 1 லட்சம் சம்பாதிக்குதுன்னு வாயை பிளந்துகிட்டு கல்யாணம் செய்பவனுக்கும் இப்படித்தான் பிரச்சனை வருகிறது.

    என்னிடம் இப்படிப்பட்ட ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஒருத்தன் வந்தார்.ரெண்டு பேரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்றோம்.அவளுக்கு 80,000 சம்பளம்.என பெருமையாக சொன்னான்.நான் ஜாதகம் பார்த்துட்டு இந்த பொணு கொஞ்சம் முரட்டு சுபாவம் ஆச்சே என்றேன்..அதை கேட்டு அவன் எந்த ரியாக்சனும் காட்டாமல்,தெரியும் சார்.அதை பார்த்தா மாசம் 80.000 கிடைக்குமா.அவ என்னை கட்டிக்கிறேன்னு சொன்னதே எனக்கு பெரிய லக் என்றான்.சரி பணம் இருந்தா போதுமா நிம்மதி வேணாமா என நினைத்துக்கொண்டு அப்புறம் என்ன விசயம்..?என கேட்டேன்.அவ என்னை விட்டு பிரியாத மாதிரி ஒரு கல்யாண முஹூர்த்தம் குறிச்சு கொடுங்க சார் என்றான்.இப்படியும் சிலர் இருக்கிறார்களே பணம் தான் வாழ்க்கை என நினைக்கிறார்களே என யோசித்தேன்.

    செவ்வாய் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மிக கோபம் நிறைந்தவர்களாக இருப்பர்.உதாரணம் சித்திரை,மிருகசிரீடம்,அவிட்டம்

    ராகு நட்சத்திரம்,கேற்து நட்சத்திர பெண்கள் பிடிவாதம் நிறைந்தவர்கள்;உதாரணம்;மகம்,திருவாதிரை,சுவாதி,சதயம்,மூலம்

    சனி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள்.உற்சாகம் இன்றி குடும்பத்தாரோடு சந்தோசம் இல்லாமல் கூட்டு குடும்பத்தில் ஒன்றி வாழாமல் ,சோகமாக இருப்பர் உதாரணம் ;பூசம்,அனுஷம்

    ஆண்களிடம் நெருங்கி பழகி கெட்ட பெயர் வாங்கக்கூடிய,சாதர்ணமாக மனதில் எந்த கெட்ட எண்ணமும் இல்லாமல் பழகினாலும் கெட்ட பெயர் வருகிறது.சுக்கிர நட்சத்திரங்களாகிய பூராடம்,பரணி

    மேற்க்கண்ட நட்சத்திர பெண்களுக்கு திருமணத்திற்கு முன்னர் ஆண்களால் பல சோதனைகள் வரும்.அதை தெய்வ துணையால் சமாளித்து வந்தால் நல்ல குடும்ப வாழ்வு அமையும்.

  4. Kokilavani says:

    1,2,10 ஆம் வீட்டின் அதிபர்கள் நிற்கும் நாவம்ச அதிபதியும் கேந்திரங்களில் இருந்து அவர்களை சுபர் பார்த்து நிற்க ஜாதகர் இளமை முதல் செல்வந்தன் ஆக இருப்பான் .வாழ்கையின் முற்பகுதியில் அவன் மிகவும் கோடீஸ்வரனாக பெறும் புகழ் செல்வங்கள் பெற்று வளமான வாழ்க்கை அமையும்

    சனியும் குருவும் நல்ல ஆதிபத்தியம் பெற்று லக்கினதத்திற்கு 2,5,9,11 ஆம் வீடுகளில் நிற்கவும் சனி அல்லது குரு ஒருவர் ஆட்சி அல்லது உச்சம் பெற்று அல்லது குரு பார்த்த சனியாக சனி திசையில் அல்லது சனி புத்தியில் அல்லது சனி அந்தரத்தில் மிகுந்த சுய சம்பாத்தியம் பெறுவான் .

    கோடி யோகம் :

    இலக்கினத்தின் அதிபதியும் 9 ஆம் அதிபதியும் கூடி 4 இல் நிற்க அந்த 4 ஆம் அதிபர் 11 இல் நிற்க சுக்கிரனும் 5 ஆம் அதிபதியும் கூடி பதினொன்றில் நிற்க அந்த 11 ஆம் அதிபர் 4 இல் நிற்க ஜாதகர் மிக எளிதாக மிகுந்த செல்வத்தை அடைந்து முக்க சுபயோகம் பெறுவான்

  5. Kokilavani says:

    ஆண்களுக்கு

    இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.

    நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.

    வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.

    வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.

    வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.

    வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.

    வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.

    இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள்.

    இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.

    இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.
    இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.

    இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.

    இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.

    மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.

    மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.

    மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.

    மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.

    மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.

    நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.

    மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.

    மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.

    மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும்.

    மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.

    வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

    இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.

    வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.

    இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.

    இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.

    தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.

    கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.

    கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.

    இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.

    வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.

    மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.

    வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.

    வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

    வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.

    தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.

    வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.

    வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.

    இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்

    முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.

    முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.

    முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்.

    மச்ச ஜாதகம் _ பெண்களுக்கு

    ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம் இருந்தால் அவளுக்கு உயர் பதவியிலும் பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவனுக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும்.

    நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவளாக இருப்பாள். யார்க்கும், எதற்கும் அடங்கிப் போகாத குணம் இருக்கும்.

    நெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள். அதே மச்சம் கருப்பாக இருந்தால் அப்பெண் அற்பகுணம் உடையவளாகவும், வேண்டாத நபர்களின் சகவாசம் உள்ளவளாகவும் இருப்பாள்.

    மூக்கின் மீது எங்காவது மச்சம் இருந்தால் அப்பெண் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பாள்.

    மூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் இருந்தால் அப்பெண்ணுக்கு அமையும் கணவர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார்.

    மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, நல்லொழுக்கம் உடையவளாக, வாசனை பொʊருட்களின் மீது பிரியம் உள்ளவளாக, சிறந்த கணவனை அடைந்தவளாக இருப்பாள்.

    மோவாயில் மச்சம் உள்ளவள் மிக உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பாள். பொறுமையும், அமைதியும் அவளின் உடன் பிறந்ததாக இருக்கும். குணத்திலும், தோற்றத்திலும் அழகான ஆணை கணவராக அடைந்திடுவாள்.

    இடது கன்னத்தில் மச்சம் உள்ளவள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவளாக இருப்பாள். அவள் விரும்பியதை செய்து முடிக்க பலர் காத்திருப்பார்கள்.

    வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து முன்னேற்றம் அடையும் திறனைப் பெற்றிருப்பாள். கஷ்டமும்_சந்தோஷமும் சமமாக அனுபவிப்பாள்.

    கழுத்தில் வலப்புறத்தில் மச்சம் உள்ளவள் முதல் பிரசவத்தில் ஆண் குழந்தையை பெறுவாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் அதிர்ஷ்டத்தை தேடித் தருவாள்.

    ஆதாரம்: சாமுத்ரிகா லட்சணம் நூல்.

  6. Kokilavani says:

    ஒரு குழந்தையின் ஜாதகம் எப்போது அதன் பெற்றோருக்கு பலன் தரும்?

    பொதுவாக கருவில் இருக்கும் போதே (ஏறக்குறைய 100 நாட்களுக்குப் பின்னர்) குழந்தையின் ஜாதகம் பலன்தரத் துவங்கி விடும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

    ஆனால் ஒரு சிலர், குழந்தைக்கு 3 வயது முடிந்த பின்னரே ஜாதகம் பார்க்க வேண்டும். அப்போதுதான் அது பலனளிக்கும் எனக் கூறுவது உண்டு. குழந்தை பிறந்த நேரம் சரியில்லாமல் இருந்தால், பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையிலான பாசப் பிணைப்பு குறைந்துவிடும் என்பதால் அப்படிக் கூறுகின்றனர்.

    ஒரு சில பெற்றோர், கரு உருவாகும் சமயத்தில் சாதாரண நிலையில் இருந்தாலும், குழந்தை பிறக்கும் நேரத்தில் அவர்கள் பொருளாதார ரீதியாக நல்ல நிலைக்கு உயர்ந்து விடுவர். எனக்குத் தெரிந்த ஒருவர் வாடகை வீட்டில் வசித்து வந்தார். வாடகை வீட்டில் இருந்த காலத்தில் அவரது மனைவி கர்ப்பம் தரித்தார்.

    பிரசவம் முடிந்து தாயும், சேயும் நலமாக வீடு திரும்பினர். அவர்கள் முன்பு வசித்த வாடகை வீட்டிற்கு அல்ல… புதிதாக அவர்கள் கட்டிய சொந்த வீட்டிற்கு. இதுபோன்ற சிறப்பான யோகங்களையும் ஒரு சில குழந்தைகளின் ஜாதகம் கொடுக்கும். ஆனால் குழந்தை உருவான நேரம் சிறப்பாக இல்லாவிட்டால் மேற்கூறியதற்கு நேர்மாறான பலன்கள் உருவாவதும் உண்டு.

    பொதுவாக பெற்றோருக்கு நல்ல தசாபுக்தி, அந்தரம் இருக்கும் காலகட்டத்தில் உருவாகும் குழந்தைகள், மிகப்பெரிய யோகம் உள்ளதாகவும், அறிவாளியாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் இருக்கும். ஆனால், பெற்றோருக்கு ஜாதகம் சரியில்லாத நேரத்தில் உருவாகும் குழந்தைகள் நோயாளியாகவும், அதிர்ஷ்டமற்றதாகவும் இருக்கும் என நூல்கள் கூறுகின்றன

    குறைபாடு உள்ள குழந்தைகள் பிறப்பதற்கு பெற்றோரின் ஜாதகமே பெரும்பாலும் காரணமாகி விடுகிறது. குறைப்பிரசவத்தில் குழந்தைகள் பிறக்கவும் இதுவே காரணம்.

  7. Kokilavani says:

    ஒரு ஜாதகத்தில் பதவியை குறிக்கும் இடம் 10-ம்இடமாகும். அதாவது தொழில் துறையை குறிக்கும் இடம் இது. இந்த 10-ம் இடம் நன்றாக அமைந்தால்தான் நிரந்தரமான தொழில் அமையும். 10-ம் இடத்தில் கேது இருந்தால் அதாவது கேது மட்டும் பத்தாம் இடத்தில் தனித்து இருந்தால், தொழில் துறைக்கும் உத்தியோகத்திற்கு தாளம் போட வேண்டும். நல்ல வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கும். அப்படி கிடைத்தாலும் அந்த வேலையில் நீடித்து இருப்பாரா என்றால் சந்தேகம்தான். சோம்பலாக இருப்பார். எதைப் பற்றியும் கவலை கொள்ளமாட்டார். சாப்பிடு, தூங்கு இதுவே இப்படிபட்ட ஜாதகரின் உலகம்.

    10-ம் இடத்தில் கேது அல்லது ராகு இருந்து அந்த கிரகத்துடன் 6.8.12க்குடையவன் சேர்ந்த ஜாதகமும் சரியான உத்தியோகத்தை பெறுவது கஷ்டம்.♦

  8. Kokilavani says:

    ராமாயணத்தின் கடேசி காட்சி ஆயுதங்களை இழந்து நிராயுதபாணியாக தனது எதிரியான ராமன் முன் ராவணன் நிற்கிறான் அந்த நிலையில் அவன் மனம் எதை எதையெல்லாமோ நினைத்து கலங்குகிறது மயங்குகிறது அந்த நிலையை கம்பன் கடன் பட்டால் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் லங்கை வேந்தன் என்று வர்ணிப்பதாக வாய்மொழி வழக்கில் சொல்வார்கள்

    ராவணன் இலங்கைக்கு மட்டும் அரசன் அல்ல பதினாலு உலகங்கள் என்று சொல்லப்படுகிற அனைத்திற்கும் அவனே ஏக சக்ரவர்த்தி நம் வீட்டில் காற்றுவரவில்லை என்றால் மின்விசிறி போடுவோம் அதுவும் இல்லை என்றால் பனைஓலை விசிறி கொண்டு வீசுவோம் ஆனால் ராவணனோ கட்டுக்கே அடங்காத வாயுபகவானே பிடித்து வந்து தென்றலாக வீச செய்தவன் பன்னீர் தெளிக்க வருனனையே வரவழைத்தவன் ராவணன் வீட்டு அடுப்பங்கரையில் நெருப்புக்குச்சி அடுப்பு பத்தவைக்க வில்லை சாட்சாத் அக்னி தேவனே வந்து தீ மூட்டினான் அவ்வளவு பாராக்கிரமம் வாய்ந்தவன் ராவணன்

    உடல் பலத்தில் மட்டுமா அவன் உயர்ந்தவன் நான்கு வேதத்தையும் கற்று கரை சேர்ந்து அறிவால் இமயம் போல் உயர்ந்து நிற்பவன் யுத்தகளத்தில் எத்தனை வீயுகங்கள் உண்டோ அத்தனையையும் வகுக்கவும் உடைக்கவும் தெரிந்தவன் நாட்டிய சாஸ்திரம் சங்கீத சாஸ்திரம் அனைத்தையும் கரைத்து குடித்தவன் அவன் வீணை எடுத்து வாசித்தால் மலைகூட மெழுகுபோல் உருகி விடும் மிகபெரிய கட்டிட பொறியாளன் ஆதிகால விமானங்களின் ரகசியம் தெரிந்தவன்

    தனக்காக உயிரை கொடுக்கும் விசுவாசமிக்க படைவீரர்களையும் படை தலைவர்களையும் கொண்டவன் அவன் உடன் பிறந்தோரும் சரி அவன் பெற்ற மக்களும் சரி அவனுக்காக எதைவேண்டுமானாலும் செய்வார்கள் ராமன் படை முன்னால் ராவண படை பெரிய சமுத்திரம் யுத்த நுணுக்கங்கள் மாயா ஜால மந்திர சித்திகள் அனைத்தையும் பெற்ற ஏராளமான வீர நிபுணர்கள் அவனிடம் உண்டு

    ஆனால் ஒரு பெண் மீது கொண்ட மோகத்தால் பலம் இழந்து மதி இழந்து படை இழந்து உறவு இழந்து நாடு நகரம் அத்தனையும் இழந்து மொட்டை மரமாக நிற்கிறான் இத்தனை இழப்பை பெறுவதும் கடன் படுவதும் ஒன்று தான் என்பது நமது மூத்தோர்களின் அனுபவ வாக்கியம்

    உலகத்திலேயே மிக பெரிய கஷ்டம் கடன் படுவதுதான் அது புத்திர சோகத்தை விட கொடியது குழந்தை பிராயத்தில் தாய் தகப்பனை இழந்து அனாதையாக திரிவதை விட கேடுடயது வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் வெறுங்கையை பிசைந்து கொண்டு கடன் கொடுத்தவன் முன்னால் தலைகுனிந்து நிற்கும் வேதனை இருக்கிறதே அது ஆயிரம் முறை தூக்கில் தொங்குவதற்கு சமமாகும் நாளைக்கு தருகிறேன் எப்பாடு பட்டாவது அடுத்தமாதம் அடைத்துவிடுகிறேன் என்று சமாதானம் சொன்னாலும் கேட்காத மனிதர் முன்னால் வயிற்றை கலக்கி உடல் நடுங்க நிற்கும் அவலத்தை வார்த்தைகளால் வடித்துவிட முடியாது அனுபவ பட்டவர்களுக்கே அந்த வலி தெரியும்

    நிறைய பேர் சொல்கிறார்கள் மனிதனின் ஆசைகள் தான் கடன்பட காரணமாக இருக்கிறது எனவே நிலைமைக்கு தக்க நடந்து கொள்வதே புத்திசாலி தனமென்று கடன் வாங்குவதில் முக்கால் வாசிபேர் கடன்பட வேண்டும் என்ற ஆசையோடு வாங்குவது இல்லை வீட்டில் பிள்ளை நோயால் படுத்து கிடக்கிறான் இது வரை கூடாத கல்யாணம் மகளுக்கு கூடிவந்திருக்கிறது என்ற மாதிரியான இக்கட்டுகள் வரும்போதே நிறையே பேர் கடன்வாங்க வேண்டிய நிற்பந்தத்திற்கு ஆளாகிறார்கள் இவர்களை ஆசையால் கடன்வாங்கியவர்கள் என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது

    ஏராளமான கடன் சுமை இருக்கிறது வருகின்ற வருமானம் அனைத்துமே வட்டிக்கு போய்விடுகிறது நிம்மதியாக ஒரு பிடி சாதம் கூட சாப்பிட முடியவில்லை எனக்கு எப்போதுதான் கடன் என்ற பாரம் இல்லாத வாழ்க்கை அமையும் என்று என்னிடம் நிறைய பேர் வருவார்கள் அவர்களிடம் கடன் பட்டதற்கான சூழல்களை கேட்டுப்பார்த்தால் எல்லாமே தவிர்க்க முடியாத காரணங்களால் உருவானது என்பது தெளிவாக தெரியும் அப்படி பட்டவர்களின் ஜாதகங்களை புரட்டி பார்த்தால் அவற்றில் ஒரு பொதுவான தன்மை இருப்பதை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது

    அவர்கள் ஜாதகத்தில் செவ்வாய் சனி கேது போன்ற கிரகங்கள் ஒன்றுக்கொன்று சேர்ந்தோ அல்லது பார்வை பட்டோ இருக்கிறது அதாவது சனி கிரகம் ஒருமனிதனின் பூர்வ ஜென்ம கர்மாவின் பலனை தரக்கூடியதாக இருக்கிறது அதே போல இதனோடு செவ்வாய் சம்பந்தப்படும்போது இக்கட்டான கொடிய வறுமை மனிதனை பிடித்துக்கொள்கிறது இந்த இரண்டு கிரகங்களோடு கேதுவும் சேரும் போது அது பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க கடன் வாங்க மனிதனை தூண்டுகிறது என்பதை புரிந்து கொண்டேன்

    வேறு சிலர் இருக்கிறார்கள் இவர்களுக்கு அதிகப்படியான வருவாய் வந்துகொண்டே இருக்கும் வியாபாரமோ தொழிலோ நஷ்டம் இல்லாமல் லாபத்திலேயே போகும் ஆனாலும் கடன் சுமை குறையவே குறையாது ஆயிரம் வருவாய் வந்தாலும் கடனை அடைக்க முடியாது வரவு எட்டணா செலவு பத்தணா என்பது போல செலவினங்கள் தவிர்க்கவே முடியாத அளவு கூடி கொண்டே போகும் இவர்கள் ஜாதகத்தை ஆராய்ந்தால் சனியும் செவ்வாயும் சேர்ந்தோ அல்லது சனியும் கேதுவும் இணைந்தோ இருக்கும் இப்படி கிரக நிலை அமைந்த ஜாதகர்கள் கோடிஸ்வரர்களாக இருந்தாலும் கடன்காரர்களாகவே வாழ்நாள் முழுவது இருப்பார்கள்

    சரி ஐயா எங்கள் ஜாதகம் இப்படி அமைந்து விட்டது அதற்கு நாங்கள் பொறுப்பல்ல ஜாதகத்தை இனி மாற்றி அமைக்கவும் முடியாது நாங்கள் வாழ்நாள் முழுவது கடன் பட்டே சாகவேண்டியது தானா என்று சிலர் கேட்பது என் காதில் விழுகிறது ஜாதகத்தில் விதியை காட்டிய இறைவன் அந்த விதியை மாற்ற வழியை காட்டாமலா இருப்பான் நிச்சயம் கடன் தொல்லையில் இருந்து படிப்படியாக விலகுவதற்கு சில வழிவகைகளை நமது முன்னோர் மூலம் நமக்கு இறைவன் காட்டியுள்ளான் அவைகளை நம்பிக்கையோடு பின்பற்றினாலே நல்ல பலன் கிடைக்கும்

    நமது முந்தைய பதிவு ஒன்றில் கடன் தொல்லை தீர எளிய வழி ஒன்றை சொல்லியிருந்தேன் அதையும் மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள் சில குழப்பங்களுக்கு விடைகிடைக்கும் (அந்த பதிவை படிக்க இங்கே கிளிக் செய்யவும்) அளவுக்கு அதிகமான கடன் தொல்லையில் இருப்பவர்கள் சத்ரு வசிய குபரே வசிய அஞ்சனங்களையும் பயன்படுத்தலாம் அப்படி பயன் படுத்தி நிறைய பேர் பலன் கண்டிருக்கிறார்கள்.

    • sundararaman says:

      நமது முந்தைய பதிவு ஒன்றில் கடன் தொல்லை தீர எளிய வழி ஒன்றை சொல்லியிருந்தேன் அதையும் மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள் சில குழப்பங்களுக்கு விடைகிடைக்கும் (அந்த பதிவை படிக்க இங்கே கிளிக் செய்யவும்) அளவுக்கு அதிகமான கடன் தொல்லையில் இருப்பவர்கள்
      சத்ரு வசிய குபரே வசிய அஞ்சனங்களையும் பயன்படுத்தலாம் அப்படி பயன் படுத்தி நிறைய பேர் பலன் கண்டிருக்கிறார்கள்.
      The Link for older post is not working
      please send it

  9. Kokilavani says:

    ஜாதகம் பார்ப்பதால் பலன் உள்ளதா? சாதகமான நேரத்தை அறிய ஜாதகம் பார்க்க வேண்டும். எப்படி திசைகளை திசைகாட்டி கருவி சரியாக காட்டி கொடுக்கிறதோ அப்படியே சாதகமான நேரத்தை ஜாதகம் காட்டி கொடுக்கும். ஆகவே சாதகமான நேரம் அறிய ஜாதகம் பார்க்க வேண்டும். இதனையே வள்ளுவர்…

    “பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

    வேந்தர்க்கு வேண்டும் பொழுது.“

    இதன் பொருள்….

    பகலில் கோட்டானைக் காக்கை வெல்லும். அரசர்க்கு பகைவரை வெல்லத் தக்க காலம் வேண்டும் என சொன்னார்.

    ஒரு மரத்தில் இரண்டு காகம் வாழ்ந்து வந்தது. ஒன்று ஆண் காகம் இன்னொன்று பெண் காகம். இரவு நேரம். அந்த நேரத்தில் ஒரு ஆந்தை பயங்கரமாக சத்தமி்ட்டுகொண்டும் ஆர்பாட்டம் செய்து கொண்டும் இருந்தது. பெண்காகத்திற்கு பயம், அதிர்ச்சி. அடுத்து என்ன நடக்குமோ உயிர் பிரிந்துவிடுமோ என்று அச்சம். பட படபடப்புடன் இருந்தது பெண் காகம்.

    ஆண் காகத்தை பார்த்து கேட்டது. “நீ ஆணா? பார் அந்த ஆந்தையை. இப்படி அட்டகாசம் செய்கிறது. அதை அடக்க உன்னால் முடியாதா?“ என கேட்டது. அதற்கு ஆண் காகம் “இதோ பார். உன் பேச்சை கேட்டு நான் அதை அடக்க நினைத்தால் நாம் அடக்கம் ஆகிவிடுவோம். நேரம் வரும் பொறு.

    அந்த ஆந்தை அஸ்தி ஆகிவிடும் என்று கூறியது ஆண் காகம்.

    இரவு மெள்ள மெள்ள மறைந்தது காலை நேரம் பிறந்தது. இப்பொழுது ஆந்தைக்கு கண் தெரியவில்லை. தத்தி தத்தி ஒரு கிளையில் உட்கார்ந்தது. உடனே ஆண் காகம் அட்டகாசமாக மாறியது. பெண் காகத்திடம் “இப்போது பார் வேடிக்கையை“ என கூறி ஆந்தையை பறந்து பறந்து தாக்கி கொத்தி அலற அலற சாகடித்தது ஆண் காகம். இது குழந்தைகளுக்கான கதையாக இருந்தாலும் நேரம் வரும் வரை அமைதி காக்க வேண்டும் என்ற கருத்தை வள்ளவர் இந்த கதையின் ழூலமாக அருமையாக கூறி உள்ளார்.

    ஆகவே சாதகமான நேரம் நமக்கு எப்படி வரும்? எப்பொழுது வரும்? என ஜாதகத்தை பார்க்க வேண்டும். ஜாதகம் உண்மையா – பொய்யா? என்ற கேள்விக்கு ஜாதகம் என்பது உண்மை. இந்த உண்மைகளை பல சம்பவங்கள் காட்டி உள்ளன. என்ன சம்பவங்கள்? எப்போது? அடுத்து வரும் உண்மைகள்.

  10. Kokilavani says:

    பொருந்தாத ஜாதகம் !
    விழிகளில் வந்தவள்
    வழியில் விட்டுச் செல்ல

    இரு நொடிகளில் பிரித்திட
    இதயத்தில் இடி வந்து மின்னிச் செல்ல …

    சரளமாய் கதை பேசி..
    பின் கண்களால் வசை பாடி

    இன்று பிறந்த காதலுக்கு அதற்குள்
    ஈமைக் கிரியைகள் செய்ய வந்த அவசியம் தான் என்ன ?

    பாதகன் நான் என்றிருந்தால் படி இறங்கி போயிருப்பேன்
    ஜாதகத்தின் மேல் பலி சொல்கிறாய் – வெறும் வாய்க்கு அவல் கிடைத்தாட் போல் வேறேதும்
    இல்லாததால்

    இலக்கணத் தவறெனில் திருத்தி
    அமைத்திடலாம் – உன்
    தலைக்கணத் தவறிதை எது
    கொண்டு சீராக்க ?

  11. Kokilavani says:

    சாதம் வடிக்க அரிசி இருக்காது குளிருக்கும் மழைக்கும் ஒதுங்க வீட்டுக்கு கூரை இருக்காது மாற்றி கட்டுவதற்கு கந்தை துணி கூட ஒழுங்காக கிடைக்காது ஆனால் ஒரு பாலர் பள்ளிக்கூட அளவிற்கு வீடு நிறைய குழந்தைகள் இருப்பார்கள் ஒட்டி போன வயிறும் சுருங்கிய தோலும் குழிவிழுந்த கண்களும் கொண்ட அந்த மக்களை பெற்ற மகராசியை இவள் பெண்ணா அல்லது பிள்ளைகளை பெற்றெடுக்கும் இயந்திரமா என்று நமக்கு எண்ணத் தோன்றும்

    இன்னொருபுறம் மூன்றடுக்கு மாளிகை வீடு நான்கைந்து கார்கள் கடைக்கு போக கார்துடைக்க சமயல் செய்ய வாசலுக்கு காவல் நிற்க எத்தனையோ வேலைக்காரர்கள் கடல் மாதிரி பறந்து விரிந்த அந்த வீட்டின் அறைகள் அமானுஷ்யமாய் அமைதியில் உறைந்து கிடக்கும் காசுகளின் சலசலப்பு கேட்குமே தவிர கால்களை கட்டிக்கொண்டு கொஞ்சு மொழி பேசும் மழலைகளின் இனிய குரலை கேட்கவே முடியாது கணவனும் மனைவியும் மட்டும் உயிருள்ள பிணங்களாக நடமாடுவார்கள்

    குழந்தைகளை பெற்றுக் கொள்வதற்கு அந்த காலத்தில் மகாசிரமம் தீர்த்தயாத்திரை போனாலும் புனித நீராடினாலும் இரவு பகல் விழித்திருந்து விரதங்களை அனுஷ்டித்தாலும் நாலாபுறமும் நெருப்பை வளர்த்து தவம் இருந்தாலும் கதைகளை தவிர நிஜ வாழ்க்கையில் மக்கட் செல்வத்தை பெறமுடியாது இன்றைய நிலைமை அப்படி அல்ல

    விஞ்ஞானம் வளர்ந்து விட்டது ஒரு புதிய உயிரை உருவாக்கத்தான் மனிதனால் தற்போது முடியாதே தவிர மற்றப்படி முடியாது இயலாது நடக்காது என்று எதுவுமே இல்லை ஆண் பெண் சேர்க்கை இல்லாமலே குழந்தைகளை உருவாக்கலாம் கருப்பை இல்லை என்றாலும் சோதனை குழாய்கள் இருக்கின்றன கருமுட்டை இல்லையா இரவல் வாங்கலாம் விந்தணு இல்லையா அதையும் வாங்கலாம் ஏன் தாயே இல்லை என்றாலும் கூட வாடகை தாயை அமர்த்திக் கொள்ளலாம்

    இப்படிபட்ட முன்னேறிய சூழலில் பிள்ளை இல்லாமல் தனியாக வாழ்வது மடத்தனம் செத்துப்போனால் தலைமாட்டில் உட்கார்ந்து அழுவதற்கு பிள்ளை இல்லையே சிதைக்கு நெருப்பு வைக்க வாரிசு இல்லையே ஏன் அவ்வளவு தூரம் போவானேன் வெளியில் போய் களைத்து வீட்டுக்கு வந்தால் அன்பாக சிரிக்க ஒரு குழந்தை இல்லையே என்று வருத்தப்படுவது முட்டாள் தனம் என்று சிலர் சொல்கிறார்கள்

    இப்படி மற்றவர்கள் பேசுவது ஒருபுறம் இருக்கட்டும் செயற்கை முறையில் கருத்தரிக்க செய்ய முயற்சித்த அனைவருக்குமா வெற்றி கிடைக்கிறது பத்து பேர் முயன்றால் ஐந்து பேருக்கு தான் காரியம் பலிக்கிறது மற்றவர்களுக்கு பணச்செலவும் உடல் கெடுதியும் மட்டுமே ஏற்படுகிறது மருத்துவர்கள் மருந்துக்கான கட்டணத்தை மட்டுமே வாங்கிக்கொள்கிறார்கள் கடவுள் தான் பலனை தருகிறார் இது தான் நிஜமான நிலை விஞ்ஞானம் வளர்ந்து விட்டது இனி வானத்தை வில்லாக வளைத்து விடலாம் மணலை கயிறாக திரித்து விடலாம் என்று பேசுவது எல்லாம் பேச்சிக்கு நன்றாக இருக்குமே தவிர நடைமுறைக்கு உகந்ததாக இருக்காது

    இயற்க்கியான முறையில் கருத்தரித்தாலும் செயற்கை முறையில் அது உருவானாலும் ஒரு சதை பிண்டத்திற்கு உயிரை கொடுத்து குழந்தையாக ஆக்கும் வேலை கடவுளுடையது அவன் விருப்பம் இல்லாமல் மனிதனால் ஒரு சிறு கடுகை கூட நகர்த்த முடியாது ஆனால் கடவுள் எனக்கு குழந்தை தருவாரா மாட்டாரா என்பதை எப்படி நான் தெரிந்துக் கொள்ள? உள்ளது உள்ளப்படி தெரிந்து விட்டால் அதற்கான முயற்சிகளை எடுப்பதா கைவிடுவதா என்று ஒரு நிலைக்கு வரலாம் அதற்கு தான் வழி தெரியவில்லையே என பலர் புலம்புகிறார்கள்

    இந்த புலம்பல் அனாவசியமானது என்று யாரும் சொல்லிவிட முடியாது பக்கத்து வீட்டுக்காரனின் எண்ணத்தையே சரிவர புரிந்து கொள்ள முடியாத நமக்கு எல்லாம் வல்ல இறைவனின் திருவுள்ளத்தை புரிந்து கொள்ள முடியுமா அவர் விதித்த விதி இது தான் என அறிந்து கொள்ள தான் முடியுமா? அது மட்டும் உறுதியாக தெரிந்து விட்டால் பல விஷயங்களுக்கு போராடவேண்டிய அவசியமே இருக்காது சாதாரண மக்களை பொறுத்தவரை எதிலும் தெளிவில்லாத பதில் கிடைப்பதனால் தான் பல போராட்டங்களை வாழ்க்கை முழுவதும் சந்திக்கிறார்கள்

    மனித வாழ்க்கையில் சில விஷயங்கள் இப்படி மட்டுமே நடக்குமென்று கடவுள் தீர்மானித்து உள்ளான் அவனின் தீர்மானம் கிரகங்களின் வழியாக மனிதன் மேல் செயல்படுத்தப்படுகிறது என்று நமது முன்னோர்கள் சொல்கிறார்கள் அவர்கள் அப்படி சொன்னதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள ஜோதிட சாஸ்திரம் என்ற ஒன்றை ஏற்படுத்தியும் வைத்திருக்கிறார்கள் அதை துல்லியமாக கருத்தூன்றி ஆய்வு செய்தால் கடவுளின் சித்தம் இது தான் என்பதை தெளிவாக அனைவரும் தெரிந்துக் கொள்ளலாம் அதற்கு பொறுமை தான் மிக அவசியம்

    சென்றவாரத்தில் ஒரு அம்மையார் என்னை காண வந்திருந்தார் தன்மகளின் ஜாதகத்தை கொடுத்து இவளுக்கு மூன்றாவதாக திருமணம் செய்து வைக்கலாமா? என்று கேட்டார் காரணம் அந்த பெண்ணிற்கு முதல் திருமணம் மூன்று மாதம் வரையுமே நீடித்திருக்கிறது கணவனாக வந்த புண்ணியவான் இவளை படாத பாடு படுத்திருக்கிறான் தனது நண்பர்களோடு பாலியல் தொடர்பை வைத்துக்கொள்ள சொல்லி கொடுமைபடுத்தி இருக்கிறான் எந்த பெண்ணால் தான் அதை ஏற்றுக்கொள்ள முடியும்? சரிதான் போடா என்று விவாகரத்து வாங்கி வந்து விட்டாள் பிறகு எப்படியோ மனதை தேற்றி இரண்டாவது திருமணத்தை பெற்றவர்கள் செய்து வைத்திருக்கிறார்கள் கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால் அங்கு ஒரு கொடுமை கூத்தாடியது போல் இரண்டாவது கணவன் திருமணம் முடிந்த ஒரு மாதத்திலேயே சாலை விபத்தில் போய் சேர்ந்து விட்டான் இவை எல்லாம் நடந்து இரண்டு வருடத்திற்கு மேலாகி விட்டது

    ஆண் பிள்ளையாக இருந்தால் எப்படியாவது பிழைத்துக்கொள்வான் என்று விட்டு விடலாம் இந்த கொடுமையான சமூகத்தில் பெண் பிள்ளையை தன்னந்தனியாக விடுவதற்கு எந்த பெற்றோருக்கு தான் துணிச்சல் வரும் அதனால் தான் அந்த அம்மையார் மகளின் மூன்றாவது திருமணத்தை பற்றிக்கேட்டார்கள் நான் அந்த பெண்ணின் ஜாதகத்தை நன்றாக ஆராய்ந்து இந்த பெண்ணிற்கு இனி திருமணமே நடத்தி வைக்காதிர்கள் அப்படி வைத்தால் ஜாதகப்படி பழைய கதை மீண்டும் நடக்கும் எனவே திருமணத்தை பற்றி யோசிப்பதை விட்டு விட்டு உங்கள் மகளுக்கு ஒரு வியாபாரத்தை துவக்கி கொடுங்கள் அவள் வருங்காலத்தில் பத்து பேரை பாதுகாக்கும் அளவிற்கு உயர்ந்து வருவாள் என்று சொன்னேன்

    எனது பதிலால் அந்த அம்மையார் மிகவும் சந்தோசம் பட்டார் காரணம் பலரும் இவளுக்கு மீண்டும் திருமணம் செய்து வையுங்கள் என்று கூறினார்கள் சில ஜோதிடர்கள் கூட ஆமாம் அது சரிதான் என்றார்கள் சிலர் தோஷம் இருக்கிறது பரிகாரம் செய்தால் சரியாகி விடும் என்றார்கள் எங்களுக்கோ பயம் ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்வில் எத்தனை முறைதான் விளையாடுவது மீண்டும் மீண்டும் பரிசோதனை செய்து பார்ப்பதற்கு வாழ்க்கை விளையாட்டு அல்ல அவள் மனது விட்டு விடடால் எல்லாம் முடிந்து விடும் யாரும் இதை இப்படி தான் செய்ய வேண்டும் என்று உறுதியாக சொன்னதில்லை நீங்கள் சொன்னதால் தெளிவான முடிவை எடுக்க முடியும் என்றார்கள்

    பல ஜோதிடர்களும் ஜோதிடம் தெரிந்தவர்களும் ஜாதகரீதியாக உள்ள உண்மைகளை பட்டவர்த்தனமாக சொல்ல தயங்குகிறார்கள் அப்படி சொன்னால் ஒரு வேளை வந்தவர் மனது பாதிக்கப்படுமோ விபரீதமான முடிவகளை எடுத்து விடுவார்களோ என தயங்குகிறார்கள் அல்லது உண்மையை சொல்லி தங்களது வியாபாரத்தை கெடுத்து விட போகிறோமோ என்றும் அச்சப்படுகிறார்கள் பொருளாதார காரணக்களுக்காக உண்மையை சொல்லாமல் மறைப்பது மனிதாபிமானம் அற்ற செயலாகும் எந்த உண்மையாக இருந்தாலும் அதை இதமாக சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லிவிடுவது தான் சிறப்பு

    அதை போலவே சில பேர் ஜாதகத்தில் எந்த வழியை பின்பற்றினாலும் குழந்தை பாக்கியம் கிடைக்காது என்ற நிலை இருக்கிறது அதாவது ஒரு ஆண்மகனுடைய ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டு போய் இருந்தால் அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது மிகவும் கஷ்டம் காரணம் சுக்கிரன் என்பது ஆணின் விந்து உற்பத்தியை குறிக்கும் கிரகமாகும் இந்த கிரகம் கெட்டு விடடால் விந்தணுவில் உயிர்ப்பு இருக்காது மேலும் ஜாதகத்தில் சூரியனும் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் அவர்களின் உயிர் அணுக்கள் அதிக நேரம் ஜீவிக்காது சுக்கிரனும் சந்திரனும் கூட்டாக இருந்தால் விந்து நீர்த்து இருக்கும் இதனால் ஒரு குழந்தையை உருவாக்கும் சக்தி அதற்கு கிடையாது

    இதை போலவே பெண்ணின் கருமுட்டையை குறிக்கும் கிரகமும் சுக்கிரன் தான் இதுவும் வலுவாக இல்லாமலும் சூரிய சந்திர சேர்க்கை பெற்றும் இருந்தால் கருமுட்டையில் பலம் இருக்காது கருப்பையும் ஒரு குழந்தையை தாங்கும் சக்தி உடையாதாக இருக்காது இப்படி பட்ட ஆண் பெண் இருவரும் திருமணம் செய்து தம்பதிகளாக வாழும் போது குழந்தை பெறுவது குதிரை கொம்பே ஆகும் நட்சத்திரம் பொருத்தம் பார்த்து திருமணம் செய்யும் நாம் கிரகங்களின் இந்த தன்மையையும் கவனிக்க வேண்டும் தம்பதியரில் யாருக்காவது ஒருவருக்கு மட்டும் இந்த குறை இருந்தால் அது தவறல்ல தாரளமாக திருமணத்தை நடத்தலாம் ஒருவரின் கிரகபலவீனம் மற்றவரின் கிரக பலத்தால் சரியாகி விடும்

    இந்த மாதிரி கிரக அமைப்பு உடையவர்கள் சோதனை குழாய் மற்றும் இது போன்ற நவீன சிகிச்சைகளை ஒரு முறைக்கு இரு முறை எடுத்துக் கொண்டால் பலன் கிடைக்கும் ஆனால் சில பேர் ஜாதகத்தில் இவர்களை அம்மா அப்பா என்று அழைக்க குழந்தையே இருக்காது இருந்தாலும் அதிக நாள் வாழாது என்ற கிரக நிலை உண்டு அவர்கள் செயற்கை முறையில் குழந்தைக்கு முயன்றாலும் அது நடக்காது பல புதிய தொல்லைகளை தான் உருவாக்கும் இந்த ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் என்று பகீரங்கமாக பல காரணக்களை முன்னிட்டு எழுத முடியாது என்னிடம் தொடர்பு கொண்டால் மட்டுமே தெரிவிக்க முடியும்

    ஏசு கிறிஸ்து ஒரு அழகான உபதேசம் செய்வார் உன் கையே உனக்கு இடைஞ்சல் செய்தால் அதை வெட்டி போடு என்பார் கையை வெட்டுவது கடினம் கை இல்லாமல் வாழ்வதோ அதை விட கடினம் ஆனால் கை அழுகி உடல் முழுவதும் அழுகல் பரவும் போது அதை வெட்டாமல் இருப்பது அறிவீனம் அதை போல குழந்தை என்பது தேவை தான் அதன் அருகாமை என்பது அவசியம் தான் அதற்காக குழந்தை இருந்தால் தான் வாழமுடியும் என்பது கிடையாது தனக்கு குழந்தை இருக்காது என்று உறுதியாக தெரிந்த பிறகு அதை நினைத்து காலமுழுவதும் அழுதுக்கொண்டு இருப்பது பைத்தியகாரத்தனம் குழந்தை இல்லாத எத்தனையோ தம்பதியினர் தானும் சந்தோசமாக வாழ்கிறார்கள் மற்றவர்களையும் ஆனந்தமாக வாழவைக்கிறார்கள்.

  12. Kokilavani says:

    சாஸ்திரங்கள் என்பது வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடக்கூடியது. வேதங்கள் ரிக், யசூர், சாமம், அதர்வனம் என்று 4 இருக்கிறது. 5வது வேதமாகத் திகழக்கூடியது ஜோதிடம். அதனால்தான் சாஸ்திரங்களில் ஜோதிடம் பற்றியும் பேசப்பட்டுள்ளது. ஜோதிடத்திலும் சாஸ்திரங்கள் பற்றி பேசப்பட்டுள்ளது.

    ஜோதிடத்தில் கிரக அமைப்பு சரியில்லை என்றால், அதற்குப் பரிகாரங்களை சாஸ்திரங்கள் மூலமாகத்தான் சொல்கிறோம். இந்த மந்திரத்தை, இந்த வேதத்தை, அதிகாரத்தைப் படித்தால் இந்த கிரகத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கும் என்று சொல்கிறோம்.

    ஒரு கிறித்தவ நண்பர் ஒருவர் வந்திருந்தார். செவ்வாயும், குருவும் பலவீனமாக இருப்பதால் ஒரு சில இந்துக் கோயில்களுக்குச் செல்லுமாறு சொன்னேன். அதற்கு, இல்லை நாங்கள் மதம் மாறிவிட்டோம். அங்கு போக முடியாது என்று சொன்னார்.

    குருவினுடைய ஆதிக்கத்தில் அந்தோணியார் வருகிறார். ஆய்வில் நாம் பிரித்து வைத்திருக்கிறோம். புனித அந்தோணியார் கோயிலிற்குப் போய் வாருங்கள். பைபிளில் மார்க் எழுதிய சுவிசேஷத்தை எடுத்துப் படியுங்கள். அவ்வாறு படிக்கும் போது குரு, செவ்வாயுடைய தாக்கங்கள், பாதிப்புகள் எல்லாம் விலகும் என்று சொன்னேன். அவர்கள் அவ்வாறு செய்துவிட்டு, எங்களுக்கு வித்தியாசம் தெரிகிறது என்று சொன்னார்கள்.

    இதுபோலதான், சாஸ்திரங்கள் ஒருபக்கம் இருந்தாலும், வேதங்கள், மந்திரங்கள், உபநிடதங்களிலும் – கீதையில் பார்த்தீர்களென்றால், கிரகங்களில் சுக்ரனும் நானே என்று பகவான் சொல்கிறார். சூப்பர்லேட்டிவாக வரும் போது தன்னை சுக்ராச்சாரியாராக பிரகடனப் படுத்துகிறார். சாஸ்திரமும், ஜோதிடமும் பல இடங்களில் இணைந்து போகிறது.

    சாஸ்திரப்படி பையனுக்கு காது குத்த வேண்டும் என்றால், ஜோதிடப்படி எந்தெந்த திதிகள், நட்சத்திரங்கள் வரும் நாட்களில் காது குத்தினால் நல்லது, எந்தெந்த நாட்களில் திருமணம் முடித்தால் நல்லது என்று சொல்கிறோம். திருமணம் என்றவுடன் மந்திரங்கள் ஓதுதல் போன்றவையும் வருகிறது.

    இப்படி ஒன்றுக்கு ஒன்று பின்னிப் பிணையக்கூடியதுதான். சில நேரங்களில் சாஸ்திரங்கள் ஜோதிடத்தைப் பயன்படுத்துகிறது. பல நேரங்களில் ஜோதிடம் சாஸ்திரங்களைப் பயன்படுத்துகிறது. ஆகவே, இது இரண்டுமே நாணயத்தி‌ன் இரண்டு பக்கங்களைப் போலத்தான் இருக்கிறது.

  13. Usha says:

    பூமியில் இருந்து விண்வெளியில் முதலில் சந்திரனின் ஓடுபாதையும், பிறகு புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய் எனும் வரிசையில் ஓடுபாதைகளும் இருக்கும். ராசிச் சக்கரத்திலும், சுக்கிரனுக்கு முன்னும் பின்னுமான வீடுகளில், புதனும் செவ்வாயும் தென்படுவர். ரிஷபத்துக்குப் பொறுப்பான சுக்கிரனின் முன் வீட்டில் புதனும், பின் வீட்டில் செவ்வாயும் அதிபதியாக இருப்பர். துலாத்துக்கு அதிபதியான சுக்கிரனுக்கு முன் வீட்டில் செவ்வாயும், பின் வீட்டில் புதனும் இடம் மாறியிருப்பர்.

    சுக்கிரன் உலக சுகங்கள் அனைத்தையும் நமக்கு வழங்குபவன். அவன் வலுவை இழந்தால், ஏழ்மையில் தள்ளுவான்; வலுப்பெற்றிருந்தாலோ செல்வத்தில் திளைக்கச் செய்து, சிந்தனையைத் திருப்பி, சிக்கலில் சிக்க வைத்து, நம்மைத் துயரத்தில் ஆழ்த்துவான். சுக்கிரன் அளவான வலுவுடன் இருந்தால், வளமான வாழ்வைத் தருவான் நமக்கு!

    பக்கத்து வீட்டு புதன்- விவேகத்துடனும், மறுபக்கத்து வீட்டுச் செவ்வாய்- சுறுசுறுப்புடனும் நம்மை இயங்க வைப்பார்கள். புதனது சேர்க்கையால் விவேக மும் கலப்பதால், செல்வச் செருக்கின்றிச் செயல்படும் திறன் கிடைக்கும். செவ்வா யுடன் சேரும்போது, ரஜோ குணத்தின் சேர்க்கை நிகழ, தவறான சிந்தனை தலை தூக்கும்; மெத்தனம் வெளிப்படும்; துயரத்தைச் சந்திக்க நேரிடும்.

    சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் பயண வேளையில் ஒற்றுமை உண்டு. இருவருக்கும் ஏறக்குறைய இரண்டு வீடுதான் இடைவெளி! அடிக்கடி சூரியனுடன் நெருங்கும் வேளை அதிகம் உண்டு என்பதால், சூரியனின் ஒளியில் மங்கி, செயல்படும் தகுதியை இழக்க நேரிடும். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோருடன் சேரும்போது, தனது தனித்தன்மையை இழந்துவிடுவான், சுக்கிரன். சேர்ந்த கிரகத்தின் செயல்பாடும் அவனில் கலப்பதால், மாறுபட்ட பலனையே தருவான். ‘இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை’ என்கிறான் காளிதாசன். இதற்கு, சுக்கிரனின் மாறுபட்ட அமைப்பே காரணம். ஏழை, செல்வந்தன் ஆகிய இந்த இரண்டு நிலையும் அவனால் ஏற்படுவதே!

    மாறுபட்ட காலத்தில், விகிதாசாரப்படி செல்வத்தைத் தருவதால், ஏழ்மையும் செல்வச் செழிப்பும் என மாறி மாறி வருகிற நிலையைச் சந்திப்பவர்கள் இருக்கின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு! சுக்கிரன் செல்வத்தில் மூழ்கடித்தால் விவேகம் குன்றும்; சிந்தனை திசை திரும்பும். சுக்கிரன் வலுவிழந்தால், விவேகம் முளைக்கும்; செல்வந்தனாவது கடினம். இந்தச் செல்வம், விவேகம் இரண்டும் ஒருசேரக் கிடைப்பது அரிது! அதாவது, கிடைத்ததைக் கொண்டு திருப்திப்பட வேண்டும் எனும் கருத்தை உணர்த்துகிறான், சுக்கிரன். அறிவும் செல்வமும் மாமியார்- மருமகளைப்போல… ஒன்று சேராது! ஸ்ரீலட்சுமியும் ஸ்ரீசரஸ்வதியும் மாமியார்- மருமகள்தான். இரண்டுபேரும் ஒத்துப் போகமாட்டார்கள். அறிவு இருப்பவரிடத்தில், செல்வத்தின் சேமிப்பு இருக்காது; செல்வம் மிகுந்தவனிடம் அறிவு மங்கும். இந்த இரண்டின் தாக்கம், இன்றைய விஞ்ஞான உலகிலும் உண்டு! பொருளாதாரமும் விவேகமும் சம அளவில் இணையாது. வயதில் முதிர்ந்தவன், அறிவில் முதிர்ந்தவன், ஒழுக்கத்தில் முதிர்ந்தவன் ஆகிய அனைவரும் செல்வந்தனின் வீட்டு வாசலில், கைகட்டிச் சேவகம் செய்யக் காத்திருக்கின்றனர் என்கிறார், கவிஞர் ஒருவர் (ஞானவிருத்தா; வயோவிருத்தா…). இன்றைக்கு, இந்தச் சூழலே அதிகம் காணப்படுகிறது.

    அதாவது, செல்வமும் விவேகமும் சம வலிமையுடன் திகழ்கிற நிலையை ஜோதிடம் உருவாக்கவில்லை. புதன், கன்னியில் உச்சனாக இருப்பின், சுக்கிரன் உச்சம் பெறமாட்டான். சுக்கிரன் மீனத்தில் இருப்பின், உச்சம் பெற்றிருப்பான். புதன், அங்கே நீசனாகிவிடுவான். அதாவது, புதனுடன் மீனத்தில் சுக்கிரன் இருந்தால், புதனும்; புதனுடன் கன்னியில் இணைந்தால், சுக்கிரனும் நீசம் பெறுகின்றனர். அதாவது, இருவரும் முழு பலத்துடன் இணைவது, இயலாத ஒன்று. அறிவு வலுப்பெற்றால் செல்வம் முடங்கும்; செல்வம் வலுப்பெற்றால் அறிவு முடங்கும் என்பதை காலத்தின் நியதியாக சுக்கிரன் வெளிப்படுத்துகிறான். இருவரது சேர்க்கை அவர்களின் இயல்புகளை இடமாறச் செய்யும். துஷ்டனின் சேர்க்கையில் நல்லவன் துஷ்டனாகலாம். நல்ல சேர்க்கையால் துஷ்டனும் நல்லவனாகலாம்!

    மீனத்தில் நீசனான புதனுக்கு உச்ச சுக்கிரனின் சேர்க்கையைப் பார்த்து, புதனுக்கு நீசபங்கம் வந்து, ராஜ யோகமாக மாறிவிட்டதாக… நற்பலனாக சித்திரித்து விளக்கமளிக் கும் ஜோதிடம். கன்னியில், நீச சுக்கிரனுக்கு உச்ச புதனது சேர்க்கையில் நீசபங்கம் வந்து, ராஜ யோகமாக மாறியதாகச் சித்திரிக்கும். உச்ச கிரக சேர்க்கையில், நீசம் வலுப்பெறும்; நீசக் கிரக சேர்க்கையில், உச்சம் தரம் தாழ்ந்து விடும் என்கிறது அது! இந்த இரண்டு சேர்க்கையும் ஒன்றை இழந்து, மற்றொன்றை வழங்குமே தவிர, இரண்டையும், சமமாகச் சேர்த்து வழங்காது. இதை உயர்ந்த யோகமாகச் சொல்லும் ஜோதிடத்தின் கூற்றுக்கு ஆதாரம் தேட வேண்டி யுள்ளது. ஆக, இருவரின் உச்ச நீச சேர்க்கையில், இருவரும் சம பலனை அளிக்கும் வாய்ப்பு இல்லை என்பதே உண்மை. எனவே, அறிவும் செல்வமும் ஒரே இடத்தில் முழுமையாக இருப்பது, அரிதாகி விடுகிறது. இருட்டும் வெளிச்சமும் ஒரே இடத்தில் இருப்பதில்லை.

    களத்திரகாரகனாகவும் விவாக காரகனாகவும் செயல்படுபவன். சிற்றின்பம், உலக சுகம், பாட்டு, இசை, நாட்டியம் முதலான கலைகள், ஆடம்பரப் பொருட்களில் ஈர்ப்பு, புதிய பொருட்களின் மீதான ஆர்வம் ஆகிய அனைத்தையும் தரவல்லவன் சுக்கிரன்; அழகிலும் அழகிய பொருட்களிலும் ஆர்வத்தைத் தூண்டிவிடுவான் அவன்.

    கடகம் போன்ற ஜல ராசியில் இருந்து, அது லக்கினத்திலிருந்து களத்திர ஸ்தான மாக அமைந்தால், பலரிடம் சிற்றின்பத்தைத் தேடி அலையவைப்பான். அஷ்டமத்தில் வீற்றிருந்தால், தாம்பத்திய சுகத்துக்காக ஏங்க வைப்பான்; காலம் கடந்து தருவதுடன், முழுத் திருப்தியைத் தராமல் அலைக்கழிப்பான். இரண்டு பாப கிரகங்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட சுக்கிரன், வலிமையை இழந்த நிலையில் இருந்தால், அரைகுறையான தாம்பத்ய சுகத்தைத் தந்து, விரக்தியில் தள்ளுவான். சுக்கிரனுக்கு, 4-லும் 8-லும் பாப கிரகம் இருக்க… ‘சதுரச்ர’ தோஷத்தைச் சந்தித்த சுக்கிரன், களத்திர தோஷமாக மாறி, மனைவியை இழக்கச் செய்வான்.

    விவாகத்துக்குக் காரகன், சுக்கிரன். ‘காரகன்’ என்றால், நடைமுறைப்படுத்தவேண்டியவன் என்று அர்த்தம். அவன் நல்ல நிலையில் இருந்தால், உரிய தருணத்தில், தடங்கலின்றித் திருமணத்தை நடத்திவைப்பான். லக்னத்தில் இருந்து, 7-வது வீடு களத்திர ஸ்தானம். அங்கே, விவாக காரகனான சுக்கிரன் இருந்தால், களத்திர சுகத்தை பலவீனமாக்கு வான். 7-ஆம் பாவமாக அமைந்த விருச்சிகத்தில் வீற்றிருக்கும் சுக்கிரன், வரம்பு மீறிய சிற்றின்பத்தைத் தேடச் செய்து, துயரத்தில் ஆழ்த்துவான். சூரியனுடன் இணைந்து, 9-வது இடத்தில் அமர்ந்தால், வெப்பத்தின் தாக்கத்தால் தாம்பத்திய ஈடுபாட்டை வெட்டிவிடுவான். பாப கிரகங்களுடன் இணைகிற சுக்கிரன், தனது இயல்பை வெளிப்படுத்த முடியா மல் தவிப்பான். மகர லக்னம், துலாத்தில் சுக்கிரன். துலாம் 10-ஆம் வீடு… அங்கே சுக்கிரன் அமர்ந் தாலும்; சிம்ம லக்னம், ரிஷபத்தில் சுக்கிரன். ரிஷபம் 10-ஆம் வீடு… அங்கே சுக்கிரன் அமர்ந்தாலும், அவனுக்கு கேந்திராதிபத்ய தோஷம் உண்டு. இந்தத் தோஷத்தை எட்டிய சுக்கிரன், வேலையில் இடையூறு விளைவித்து, பொருளாதாரப் பற்றாக் குறையை உண்டுபண்ணுவான். சுபக் கிரகங்க ளோடும்- அவற்றின் பார்வை பட்டும், சுக்கிரன் வலுப் பெற்றிருந்தால், வாழ்நாள் முழுவதும் இன்ப மயமாக வாழலாம்.

    கும்பம், மகர லக்னங்களுக்கு சுக்கிரன் யோக காரகன். ஒரு கிரகம், கேந்திரத்துக்கும் த்ரிகோணத் துக்கும் அதிபதியாக இருந்தால், யோக காரகன் எனும் அந்தஸ்து உண்டு. சுக்கிரன் யோக காரகனாக மாறியதால், அவனுடன் சேர்ந்த கிரகங்கள் நற்பலனை அளிக்கும்விதமாக மாறிவிடுவர். பாபத்துடன் இணைந்த சுக்கிரன், பாப கிரகத்தின் தாக்கத்தால் தனது இயல்பை மாற்றி, சேர்ந்த கிரகத்தின் இயல்புக்குத் தக்கபடி பலன்களைத் தருவான். அப்போது, சுக்கிரனின் தன்னிச்சையாகப் பலனளிக்கும் சுதந்திரம் பறிக்கப்படுகிறது.

    ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழில் செவ்வாயும், சுக்கிரனும் இருப்பதாகக் கொள்வோம். செவ்வாய், தாம்பத்திய சுகத்தை அழிப்பவன். ஆனால், சுக்கிரனின் சேர்க்கையில் தன் இயல்பை மாற்றிக்கொண்டு பலனை அளிப்பான். இதேபோல், சுக்கிரனும் தனது இயல்பை மாற்றி செவ்வாயின் இயல்புடன் பலன் தருவான். அப்போது, இருவரிலும் இருவரின் இயல்பும் கலந்திருப்பதால், இழப்பையும் தராமல், சுகத்திலும் முழுமை கிடைக்காமல் அரைகுறை பலத்தையே தருகின்றனர். செவ்வாய் 7-ல் இருந்தால் வைதவ்யம்; செவ்வாயுடன் சுபக் கிரகம் சேர்ந்திருந்தால், வைதவ்யம் இல்லை. ஆனால், ‘புனர்பூ’வாக மாறிவிடுவாள். அதாவது, ஆசைப்பட்டவனைத் துறந்து வேறொருவனை ஏற்பாள் எனப் பலனை மாற்றிச் சொல்வதைக் கவனிக்க வேண்டும் (ஆக்னேயை: விதவாஸ்தகை: மிச்ரே புனர்பூ பவேத்). செவ்வாயால் ஏற்பட்ட தாம்பத்யத்தை இழக்கும் சூழலைச் சந்தித்தவளை வேறொருவருக்கு மனைவியாக மாற்றி, கறுப்புப் புள்ளியுடன் வாழ்க்கையைத் தொடரச் செய்வான், செவ்வாயுடன் இணைந்த சுக்கிரன். ‘புனர் பூ’ எனும் திருப்புமுனை அவனால் உருவானது.

    தசா வருஷத்தின் எண்ணிக்கை மற்ற கிரகங்களைவிட சுக்கிரனுக்கு அதிகம். 20 வருடங்கள் அவனது தசை நீடிக்கும். மூன்றாக வகுத்த தசா வருஷத்தில், 2-வது பகுதியில் தசா பலன்களை அள்ளித் தருவான். 2, 7-க்கு உடையவனாக அங்கே வீற்றிருந்தால், அதாவது மாரகாதிபதி மாரகத்தில் இருந்தால், அழிவைச் சந்திக்க வைப்பான். இன்பத்தைக் கொடுத்துவிட்டு, திடீரென துன்பத்தில் தள்ளும்போதுதான், அது பொறுக்கமுடியாத துயரமாகிவிடுகிறது. அதை தனது இயல்பாகக் கொண்டிருக்கிறான் சுக்கிரன்.

    ஆணில் உருப்பெறும் கடைசித் தாதுவுக்கு ‘சுக்கிரம்’ எனப் பெயர் வைத்திருக்கிறது ஆயுர்வேதம். அதுதான் தாம்பத்திய சுகத்தின் அடிப்படை. சிற்றின்பத்தை அளிப்பவனான சுக்கிரனுக்கு, இந்தப் பெயர் பொருத் தமே! நல்லவன் சேர்க்கையில் இன்பம், கெட்டவன் சேர்க்கையில் துன்பம் என்பதற்கு சுக்கிரன் எடுத்துக் காட்டு. இளமையை இனிமையாக்குவதில் இவனுக்கு நிகர் எவரும் இல்லை. வம்ச விருத்திக்கு, வாழ்வில், நம்பிக்கையூட்ட சுக்கிரன் அவசியம். விண்வெளி ஓடு பாதையில் ஆத்மகாரகனான சூரியனுடன் நெருங்கிச் செல்வதால், தன்மானத்துடன் வாழச் செய்பவன் அவன். அறத்தை வளர்ப்பதிலும், இனத்தைப் பெருக்குவதிலும் திறமை பெற்றவன் என்று அவன் அமர்ந்த ரிஷப ராசி சுட்டிக்காட்டும் (தர்ம ஸ்த்வம் விருஷரூபேண…). சீர்தூக்கி ஆராய்ந்து முடிவு எடுப்பதில் முதன்மையானவன் என்பதை அவன் அமர்ந்துள்ள துலா ராசி சுட்டிக் காட்டும். அதாவது, கிராமச் சூழலிலும் (ரிஷப ராசி) நகரச் சூழலிலும் (துலாம்) மனம் ஒத்துப்போக வைப்பதில் திறமைகொண்டவன். மகிழ்ச்சிக்கு மனமே காரணம்; இடம் காரணமல்ல என விளக்குபவன் சுக்கிரன்.

    சுக்கிர வழிபாட்டு முறையை வேதம் வகுத்துத் தந்திருக் கிறது. ‘சுக்கிர சாந்தி’ என விரிவான வழிபாட்டை சாந்தி ரத்னாதரம் எனும் நூல் விளக்குகிறது. வெள்ளிக்கிழமை, அவனை வழிபட உகந்த நாள். ‘சும் சுக்ராயநம:’ என்று சொன்னால் அது மந்திரமாக மாறிவிடும் என மந்திர மஹோததி சொல்கிறது. இந்த மந்திரத்தை 108 முறை மனதுக்குள் சொல்லி வழிபடலாம். சுக்கிரனின் உருவத்தை ‘சும் சுக்ராய நம:’ எனும் மந்திரத்தால், 16 உபசாரங்களை நடைமுறைப்படுத்தி வணங்குவது வளம் தரும். தினமும் அவசரத்துடன் வழிபடுவதை விட, வெள்ளிக்கிழமை தோறும் முழு ஈடுபாட்டுடன் சுக்கிரனை வணங்கி பலன் பெறலாம்.

    ‘பகவந்தம் கவிம் சுக்ரம் பிரணதார்த்தி வினாசகம்
    ஸர்வகாம பிரதம் வந்தெ பரமானந்த தாயகம்’

    – எனும் ஸ்லோகத்தைச் சொல்லியும் வணங்குங்கள்; வாழ்வு வளம் பெறும்.

எப்பொருளையும் பற்றி மேலும் நீ அறியக்கூடியதெவை?